LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 27, 2013

சாத்தானும் சிறுமியும் ’யூமா வாசுகி’யின் கவிதைத்தொகுப்பு குறித்து.... _ லதா ராமகிருஷ்ணன்

சாத்தானும் சிறுமியும்

யூமா வாசுகியின் கவிதைத்தொகுப்பு குறித்து....
_ லதா ராமகிருஷ்ணன்

[May. 18 2013இதழ் 26 மலைகள் இணைய தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை]



கல்லூரி நாட்களில்தாகூரின் கீதாஞ்சலி கவிதை கவிதைத் தொகுப்பைப் பற்றிய தனது முன்னுரையில் W.B. யேட்ஸ் என்ற புகழ்பெற்ற கவிஞர், ‘பேருந்தில் பயணமாகும்போது கீதாஞ்சலிக்  கவிதைகளைப் படிப்பது தன் வழக்கம் என்றும் அப்படிப் படித் துக்கொண்டே வரும்போது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியா மல் கண்களில் நீர் நிரம்பிவிடும் என்றும் எழுதியிருந்ததைப் படித்து, ‘இது என்ன மிகையான விவரிப்பு என்று மனதில் எதிர் வினையாற்றி அதைப் பொய்யென்று நிரூபிப்பதாய் பேருந்தில் கீதாஞ்சலி கவிதை களைப் படிக்கத் தொடங்கிஒவ்வொரு முறையும் அதேவிதமாய் கண்களில் நீர் நிறைந்துவிடும் ஒருவித மனம் வெளுத்தல்’ அனுபவத்தைப் பெற்றதுண்டு.

கவிஞர் யூமா வாசுகியின்  சாத்தானும் சிறுமியும்  கவிதைத்தொகுப்பைப் படித்தபோதும் அதேவிதமான நெகிழ்ச்சி யும் மனம் வெளுத்தலும்’ ஏற்பட்டது.

நவீன தமிழிலக்கிய வெளியில் கவிதைகதைகுழந்தை இலக்கி யம்மொழிபெயர்ப்பு என பல பிரிவுகளிலும் ஆரவாரமில்லாமல் தடம் பதித்திருப்பவர் தோழர் யூமா வாசுகி. கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவருபவர்தரம் நீர்த்துப் போகாமல் இயங்கிவருபவர்.

அவருடைய இரவுகளின் நிழற்படம்’, ‘என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து  தேர்ந் தெடுத்த கவிதைகள் இடம்பெறும் இத்தொகுப்பு – சாத்தானும் சிறுமியும் – நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளின் நலவாழ்வுக்காக மனமுருகஒரு ஆத்மார்த்தமான பிரார்த்த னையே போல் குரல் கொடுக்கின்றன.

 இந்தக் கவிதைகளில் இடம்பெறும் குழந்தைகளைஅவர்களின் அற்புதக் கனவுகளைஅவை குரூரமாகக் கலைக்கப்படும் அவ லத்தைகுழந்தைகளுக்கு நாம் அளித்திருக்கும் சீர் கெட்ட சமூகச் சூழலைஅதற்குள்ளாக குழந்தைகள் தங்களுக்கென்று கட்டி யெழுப்பிக் கொள்ளும் மாயக் கோட்டைகளைகுழந்தைகளின் பல முகங்களைசிரிப்பின் வாசனையைஅழுகையின் வேதனையை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்அவற்றின் மத்தியில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஆனால்நம்முடைய வாழ் வின் அவசரங்களில் அவற்றை நின்று நிதானித்து உள்வாங்கிக்கொள்ளப் பொழுதற்றுபொறுமை யற்றுகடந்துபோய்க் கொண்டேயிருக்கிறோம். அவ்வப்போது குற்ற வுணர்வின் கனம் தாங்க முடியாமல் போவதும் நடக்கிறது.

இத்தனை விஷயங்களையும் யூமா வாசுகியின் சாத்தானும்சிறுமி யும் நமக்கு மிக நுட்பமாகப் புலப்படுத்துகிறார்கள். குழந்தைக ளின்பெரியவர்களின் பல முகங்கள் இந்தக் கவிதை களில் துல்லியமாக வெளிப்படுகின்றன.

குழந்தைகளின் அண்மையில் குதூகலங்கொள்ளும் கவிமனம் அவர்களின் ஏமாற்றங்களிலும்காயங்களிலும் தீராத வலியுணர்கிறது.

 ‘பத்து வயது கூட நிரம்பாத மீனா பக்கத்து வீட்டில்

வேலைக்காரியாகப் பாடுபடுகிறாள்

 

அரைத்த மாவு நிரம்பிய வாளியை எங்கிருந்தோ

சுமக்கமுடியாமல் கொண்டுவருகையில்,

என் தங்கையாயிருந்து திருவிழா களித்து

பரிசுகளுடன் திரும்புவதாய் சமாதானங்கொள்வேன்

என்று தொடங்கும் தொகுப்பின் முதல் கவிதை தொடங்கி இறுதிக் கவிதை வரைபல்வேறு சமூக அவலங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மை மனசாட்சி யென்னும் நீதிதேவனின் முன்னிலையில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி மௌனமாய்க் கேள்வி கேட்கிறார்கள்தீர்ப்ப ளிக்கிறார்கள். சமயங் களில் நம்மைக்கைபிடித்து அழைத்துச் சென்று அவர்களுக்காகவும்நமக்காகவும் நம் கண்களில் நிறைந்து வழியும் கண்ணீரை அன்போடு துடைத்துவிட்டு அதியழகாய்ச் சிரிக்கிறார்கள்!

 பூமொழிமதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்சாத்தானும் சிறுமியும்மாலை நேர வீடுஒரு மனிதன் முய லான போதுஈரம்மற்றும்தலைப்பிடப்படாத சில கவிதை கள் என இருபது இருபத்தியிரண்டு கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் அனாவசியம் அல்லது  மெலோடிராமா’ என்று சொல்லத் தக்க ஒரு வரியோவார்த்தையோ கிடையாது. நம் அடிமனதை ஊடுருவி மனம் வெளுக்க’ வழி செய்யும் கவிதைகள் இவை.

பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்

உன் குழந்தை என் கால்களைத் தொட்டு

கை மலர்த்தும்படி செய்தாயே,

பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது

எவ்வளவு பாடுபட்டது

அதைவிடவும் நீ என்னை

முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்

 _என்று கூறுவதிலுள்ள பரிதவிப்பை வாசக உள்ளம் ஒவ்வொன் றிலும் கண்டிப்பாக பரிவதிர்வை உண்டாக்கும்.

 ஏதொரு குழந்தையும்

எங்கோ கனவில் துடித்தழுதால்

எப்படிப் போய்த் தேற்றுவேன் கர்த்தரே

_ என்று எத்தனை கலங்கிப்போகிறது கவிமனம்! இந்தத் தொகுப்பி லுள்ள கவிதைகளை வாசிக்க வாசிக்க கவிமனதின் பரிதவிப்பு நம் மனதில் பாரமாய் இறங்கிக்கொண்டேபோகிறது. [இந்த மன பாரத்தை உணரவில்லையானால் நாம் மனிதனாயிருந்து என்ன பயன்?]

 ஆனால்இதே குழந்தைகளே கவிஞரின் மனபாரத்தை மயிலிற காக்கி விடுபவர்களாகவும் இருக்கிறார்கள்!

 ‘இன்றைய பகலெல்லாம்

சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தவன் யார் என்று

அகால இரவுக் கனவில்

தேடியலைந்தது ஒரு குழந்தை.


  _ என்று தொடங்கும் கவிதை


  நீ தானே?” என்றது குழந்தை.

ஆம்!” என்றேன் நான்.

தூக்கச் சொல்லிக் கை விரித்தது.

அள்ளி அணைத்துக்கொண்டேன்.

கனவின் கடைசி நொடியில் ஒரே ஒரு முத்தம்.

விடிந்தது.

காலையில் மனம் தெளிந்திருந்தது

 என்று முடிகிறது.


ஓவியர் மணிவண்ணனின் கைவண்ணங்கள் யூமா வாசுகியின் கவிதைகளுக்கு உரிய மரியாதை செய்வதோடு தம்மளவில் தனிக் கவிதைகளாகவே விளங்குகின்றன எனலாம்! என்றாலும்குழந்தை களைப் பற்றிய கவிதைகள் இடம்பெற்றிருக்கும் தொகுப்பில் குழந்தைகளின் முகபாவங்களும்அசைவுகளும்இடம்பெற்றிருந் தால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றியது. அப்படி இருக்கலாகாது என்று பிரக்ஞாபூர்வமாகவே முடிவெடுத்திருக்கக் கூடும் கவிஞரும் ஓவியரும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

 தொகுப்பிற்கு எழுத்தாளர் கவின்மலர் அத்தனை அருமையான முன்னுரை எழுதியிருக்கிறார்! முன்னுரையின் அரசியல்’  குறித்து நிறைய எழுதலாம். ஆனால்கவின்மலரின் முன்னுரை அன் பும்தெளிவும் நிறைந்த ஒரு வாசக மனதிலிருந்து ஆத்மார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது. 

 “உயிரை உலுக்கும் வரிகளை எழுதிவிட்டு யூமா வாசுகி அவர் பாட்டுக்குத் தன் வேலை யைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் கிரீடத்தை கீழே வைக்காமல் சுமந்து கொண்டு திரிகிறவர்கள் இருக்கும் இச்சமூகத்தில் நான் எழுத்தாளன் என்கிற கர்வமோகவிஞன் என்கிற செருக்கோ அற்ற எளிமை யான மனிதராகவே எப்போதும் இருக்கும் யூமாவை வாழ்த்தும் தகுதி எனக் கில்லை. வாசிப்பின் மீது தீராத தாகத்தை ஏற்படுத் திய யூமா வாசுகி என்கிற அற்புத மனித ருக்குஅவருடைய எழுத்துக்குஅவர் அளித்திருக் கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குப் பரிசாக அல்ல…. கைமாறாகபெரும் அன்பும்முத்தங்களும் தவிர வேறெதுவும் கைவசம் இல்லைஎன்று கவின் மலர் முத்தாய்ப்பாக எழுதியுள்ள வரிகள் இந்தத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொரு வாசக மனதிலும் கண்டிப்பாக எதிரொலிக் கும்!

 

 

 

000

No comments:

Post a Comment