LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, March 4, 2016

வாசகப் பிரதி - ரிஷி


வாசகப் பிரதி


ரிஷி




ஊரில் புதிதாய்த் திறந்திருக்கும் பிரம்மாண்ட 

நகைக்கடைக்குத்

தன் தாயை அழைத்துச் சென்ற மகள்

அவளுக்குத் தங்க வைர அணிகலன்களை 

வாங்கி அணிவித்து

அப்படி அழகு பார்த்தாளாம்!

குரல் தழுதழுக்கப் பீற்றிக்கொண்டாள் பெண் -

அந்த விளம்பரத்தில்.


அந்தத் தாயின் கண்களில் ததும்பும் 

கண்ணீரும் புன்னகையும்

பொன்னகையால் அல்லபோனால் வராத 

இளமையின்பால்கொண்ட

தீராக் காதலால் என்று

பாவம், அவளுக்கும் தெரியவில்லை,

அந்த விளம்பரதாரருக்கும் தெரியவில்லை.



No comments:

Post a Comment