LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, April 28, 2015

அழிவுக்கவி - கவிதை - ‘ரிஷி’

அழிவுக்கவி
                                                                                                                            ‘ரிஷி’


வருக்கு
யாரையேனும் பழித்துப் பேசவில்லையென்றால்
அன்றைக்கு நிம்மதியாய்த் தூக்கம் வராது.

ஆயிரமாயிரமாண்டுகளாக அவரை  யாரோ
அதலபாதாளத்தில் குழிதோண்டிப் புதைத்திருப்பதாய்
அன்றாடம்  ஆகாயவிமானத்தில் பறந்துகொண்டே
அருள்வாக்களிப்பதாய்
கதைத்துக்கொண்டேயிருக் கிறார்…..

(கவிதை எழுதும் ஆண்கள்  இங்கே
கடல் தாண்டிச் செல்வது முண்டோ?)

ஆவியோ என்று திகிலாய்த்தானிருக்கிறது…

கூவிக்கூவியோ கேவிக்கேவியோ
சீவிச் சிங்காரித்துக்கொண்டு
கோணிய இடுப்புடன் இளித்துக்கொண்டு நிற்கிறா
ரெங்கெங்கு காணினும்.

மறக்காமல்
அப்பாவிகளாய்ப் பார்த்து அறுக்கப்படும் மறைநூல் கண்டு
குறையாத  உவகைகொள்ளும் அவருடைய
உலகளாவிய அன்பு மனம்
உடனடியே விரைந்து
புரையோடிய வன்மத்தில் யாரோ எழுதிய அற்ப வாசகத்தைத்
தப்பாமல் தன் முகநூலில் பதிவேற்றம் செய்து
யுகப்புரட்சி செய்துவிடும்!

பொறுப்பேற்பில்லா அரியாசனத்தில் அமரக் கசக்குமா என்ன?

ஆனால் ஒன்று _
மறந்தும் கேட்டுவிடலாகாது அவர் வேலைபார்ப்பது எங்கு, யாரிடம் என்று.

சகலரோகக்காரணியாய் அணுவோ கனவோ மனுவோ
ஏதோ ஒன்றைக் கெட்டியாய் உருவேற்றிக்கொண்டபடி
நிகழ்கால வரலாறை விடாப்பிடியாகக் கணக்கிலெடுத்துக்கொள்ள மறுத்து
எப்போதும் பற்களை நறநறத்தபடி
ஒப்பித்தலில் கண்டிப்பாக முதல்பரிசு அவருக்குத் தான்.

’இறந்த இருபதுபேருக்காய்’ அவரெதிரே
அழுதுபுரளாதோர் 
சிரத்சேதம் செய்யப்படத் தக்கவர் என்பார்.

அவர்களை ’உருப்படிகளா’க அனுப்பியது யார்?
தருக்களைத் தொடர்ச்சியாக வெட்டிவருவது யார்?
திருட்டுத்தனமாய் விற்றுத் தருவது யார்?
லாபம் பெறுவது யார்?
இந்தக் கேள்விகளைக் கேட்குமா
இவரின் இகழ்ச்சிநிறை அறிவுலகம்?

’குரலற்றவர்களின் குரலாக’த் திகழும்
அதிகாரப் பெருவிருப்பில்
கழுத்துகளைக் கணக்கெடுத்துக் கயிறா லிறுக்கியபடியே
கவிதை யெழுதும் சாகாவரம் பெற்றவர்!

'Locally Global, Globally Local'

இவராமே   மூவேழுலகும் முக்காலமும் மெச்சும்
மேதகு உன்னதத் தமிழ்க்கவிஞர்….!

இதற்குண்டோ மேல்முறையீடு தாக்கல்….?






0



No comments:

Post a Comment