Monday, January 26, 2026

மரியா மாண்டிஸோரி

 மரியா மாண்டிஸோரி



சர்வதேச மகளிர் தினத்தன்று எத்தனை பேர் மரியா மாண்டி ஸோரியை நினைவுகூர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நாளும் நினைக்கப்படவேண்டியவர் அவர். குழந்தைகளைப் பெரியவர்கள் மதிக்கவேண்டியதன், சக உயிராக, சம உயிராக பாவிக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தவர். குழந்தைகளுக்கு கல்வி என்பது, கற்றல் என்பது ஆனந்தமாக, ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து எடுத்துரைத்தவர்.

குழந்தையை வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளை, தன்னம்பிக்கையை, திறன்களைக் கொண்ட முழுமனிதனாக உருவாக்குவதே கல்வியின் முதலும் முடிவுமான நோக்கமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியவர்.

அத்தகையதொரு கல்விமுறையை உருவாக்கியவர்.

No comments:

Post a Comment