LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, March 21, 2020

’கரோனா’ கிருமி குறித்த விழிப்புணர்வுப் பாடல்

கரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல்!
https://www.youtube.com/watch?v=VfXh0Rd9p18&feature=youtu.be&fbclid=IwAR0pSu_2B6nhX0HdGqo6jK39JJWXxewXRLwO8EeAa6F_hY4bA8VXhVKSrXM

https://www.facebook.com/paarvaiyatravan/videos/1407413799465714/UzpfSTEwMDAxMDA2ODM5Njk0NToxMTc4Njk5NDI1ODA4OTkz/?id=100010068396945


சுனாமி வந்து பல்லாயிரக்கணக் கானொர் இறந்த நிகழ்வுக்குப் பின் சுனாமி என்ற வார்த்தையை நகைச்சுவையாகப் பயன்படுத்திய அறிவுசாலிகள் நிறைய பேர். அவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது ‘கொரோனா’. ஆனால், இதோ, பார்வைக்குறை பாடுடைய இந்த பள்ளிமாணவர்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வுப் பாடலைஇயற்றி பாடி தங்களாலான ஆக்கபுர்வமான சமூக நலப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்!

"சிகப்பு சுடி வேணும்ப்பா" குறும்படம் குறித்து.... லதா ராமகிருஷ்ணன்

"சிகப்பு சுடி வேணும்ப்பா" 
குறும்படம் குறித்து....
லதா ராமகிருஷ்ணன்
நான் இயக்கிய "சிகப்பு சுடி வேணும்ப்பா" குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.
VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறது.
யாவரும் படம் பார்த்து விருப்பக்குறியீடும் சப்ஸ்கிரைப்பும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இச்சிறுபடத்திற்கு நீங்கள் தரும் உற்சாகம் மேலும் படங்கள் எடுக்க ஊக்கமளிக்கும்.
உங்கள் ஆதரவு தாருங்கள்.
நன்றி/ சிகப்பு சுடி வேணும்ப்பா படக்குழு. / கவிஞர் அய்யப்ப மாதவன்

வணக்கம் அய்யப்ப மாதவன், உங்களுடைய எத் தனை வருட கனவு இது! என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்! படம் பார்ப்பதை விட முதலில் உங் களை மனதார வாழ்த்துவது தான் முக்கியமாகப் பட்டது அய்யப்பன். அதனால் முதலில் வாழ்த் தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பொழுதுதான் படம் பார்த்தேன். விஷுவல் மீடியம் என்பதைப் புரிந்துகொண்டு மிக அள வாக, அர்த்த முள்ள வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கின்றன. அநாவசியமாக ஒரு சொல்லோ, காட்சியோ இல்லை. பீடமேறி போதனைகளோ, ‘ நான் எப்படி இயக்கியிருக் கிறேன் பாருங்கள்’ என்று பீற்றிக்கொள்ளும் முனைப்போ இல்லை. படம் இயல்பாக நகர்ந்து சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுகிறது!


மாநிறம் அழகுதானே என்று பேசியபடியே மேக் கப்பை அப்பி பெண் பாத்திரங்களை வெள்ளை நிறத்திலேயே தொடர்ந்து காட்டிவரும் (அல்லது, மாநிறப் பெண் அவளுடைய நிறத்திற்காக துயரம் அனுபவிப்பதாகவே காட்டிவரும்), அதன் மூலம் வெள்ளைநிறமே உயர்வு என்ற கருத்தை இளைய தலைமுறை யினரிடையே பரப்பி ‘ஃபேர் அண்ட் லவ்லி இத்தியாதிகளுக்கு இலவச விளம் பரம் செய்துவரும், சின்னத்திரை, வெள்ளித் திரைப் போலித்தனத்திலிருந்து விடுபட்டு கதா நாயகியை இயல்பான நிறத்திலேயே காட்டி யிருப்பது அருமை. இந்தப் படத்தில் வரும் கதா நாயகி எத்தனை அழகு!



காதலித்து மணந்த கணவனின் குடிப்பழக் கத்தை அவள் வெறுக்கிறாளே தவிர கணவனை வெறுக்கவில்லை என்பதையும், காசில்லாத அண்ணனிடம் தங்கைக்கு உள்ள மாறாத பாசத் தையும் அளவான வார்த்தைகளில் காட்சிகளில் மனதில் பதியவைக்கிறது உங்கள் படைப்பு.

குழந்தைக் கதாபாத்திரத்தின் இயல்பான இயக்க மும் அதன் பேச்சில் தெரியும் வசன நுட்பமும் குறிப்பிடத்தக்கது. வகுப்பில் டீச்சர் நல்ல பழக் கம் எது தீய பழக்கம் எது என்று சொல்லித் தருவதாக (கெட்ட பழக்கம் என்று குழந்தை சொல்லாது!) அந்தச் சிறுமி தன் தகப்பனிடம் சொல்வது இதற்கோர் எடுத்துக்காட்டு!

கதாநாயகன் ஒரு கண பரிதவிப்பில் திருடுகி்றார் என்றாலும் அவருடைய ஏழ்மையைக் காரணம் காட்டி அவருடைய செயல் நியாயப்படுத்தப் படவில்லை! தகப்பன்சாமியாய் குழந்தையின் இயல்பான பேச்சு அவரைத் திருத்திவிடுவதைப் பார்க்க நிறைவாயிருக்கிறது.

நடித்திருப்பவர்கள் எல்லோருமே தங்கள் பாத் திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். உங்களுக்கும் இந்தப் படத்தில் பங்கேற்ற மற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக ளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

                         தோழமையுடன்
                  லதா ராமகிருஷ்ணன்.


போயும் போயும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

போயும் போயும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


’தூய’ கவிதையைத்
துரத்தித்துரத்திப் பகடி செய்பவர்களில்
ஒருவர்
அரசியல்வாதியொருவரின் அருகில் நிற்கும்
படங்களாகவே பதிவேற்றிக்கொண்டிருக்கிறார்;
பழிப்பவர்களில் ஒருவர்
திரைப்படவாதியொருவரின் அருகில் நிற்கும்
படங்களாகவே பதிவேற்றிக்கொண்டிருக்கிறார்.

புத்துயிர்ப்பு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


புத்துயிர்ப்பு


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


மனதின் கனவுகளையெல்லாம்
விழுங்கித் தீர்த்தபின்
என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் வயிறு
பசியோடு அழுதுகொண்டிருக்கும் மனதை அமைதிப்படுத்த
ஆறுதலாய்
அதற்கு ஊட்டச்சத்தளிக்கிறது _
புதிதாய்க் கனவு காண.

Thursday, March 12, 2020

ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன்

ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம்

லதா ராமகிருஷ்ணன்
அச்சுநூல் புதுப்புனல் பதிப்பகத்தில் விற்பனைக்கு


அமேஸான் கிண்டில் மின் - நூலின் லிங்க் 



"அப்படித்தான், சில நண்பர்கள் மூலம் உலக இலக்கியப் படைப்புகள், போக்குகள் சிலவும் அறிமுகமாயின. அப்படி ஒருவர் மூலம் அறியக் கிடைத்த உலகத்தரமான படைப்பை இன்னொரு வர் மொழிபெயர்க்கச் சொல்லும் போது அதை ஆர்வத்துடன் செய்திருக்கிறேன். ஆனால் அப்படிச் செய்தது முதலில் அந்தப் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய நட்பினருக்கு உவப்பாக இருப்பதில்லை என்பதை (சம்பந்தப்பட்ட படைப்பை, படைப்பாளியைப் பற்றி அவர்களால் எழுதப்படும் கட்டுரைக ளில் என் மொழிபெயர்ப்பைப் பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது!) போகப் போகப் புரிந்துகொள்ள நேர்ந்திருக்கிறது.


ஒரு படைப்பாளியின் படைப்புவெளியை முழுவதும் வாசித்து அறிந்திருந் தால் மட்டுமே அந்தப் படைப்பாளியின் எழுத்தாக்கங்களைச் செம்மையாக மொழி பெயர்க்க முடியும் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படும்போது, ‘அப்படியெனில் என்னிடம் ஏன் அந்த மொழிபெயர்ப்புப் பணியைத் தந்தார்கள், அந்த உலகத் தரமான படைப்பாளியை முழுவதுமாக நான் வாசித்திருப்பதான பாவனையை நான் கைக்கொள்ள வேண்டும், கைக்கொள்வேன் என்று எதிர்பார்த் தார்களா அல்லது என்னை sort of errand boy(or girl, to be more precise!) என்ற ரீதியில் மட்டுமே பணித்தார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடிய வில்லை.


சிலர் தாங்கள் அறிமுகப்படுத்தும் உலகத் தரம் வாய்ந்த படைப்புகள், படைப்பாளிகள் மேல்  அத் தனை உடைமையுணர்வோடு நடந்துகொள்வ தையும் பார்த்திருக்கிறேன்.


வேறு சிலர் அந்நியமொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க் கப்படும் போது மட்டுமே மூலமொழிப் படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்று மேடைக்கு மேடை முழங்கக் கேட்டிருக்கிறேன். ஒரு வகையில் அது உண்மையே என்றாலும் இன்னொரு வகையில் அதுவோர் reductionist theory ஆகச் செயல்படுவதையும் காணமுடிகிறது.


என்னளவில், மொழிபெயர்ப்பின் மூலம் நான் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை. நான் மதிக்கும் சிலர் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியதாக ஒரு பிரதியை என்னிடம் தரும்போது அப்படித் தருபவர்மேல் எனக்குள்ள நம்பிக்கை, அபிமானம் காரணமாக அந்தப் பணியை மேற் கொள்வது வழக்கம்.


சில பிரதிகளை மொழிபெயர்க்க மறுத்ததும் உண்டு. பாலியல் பலாத்காரத் திற்கு ஆளாகும் பெண் ஒருத்தி அதில் ஆழ்மனதில் பரவசமடைகிறாள் என்பதாய் விரியும் ஒரு பிரதியை மொழிபெயர்த்துத் தரும்படி என்னிடம் கேட்கப்பட்டபோது அதைப் படிக்காமலேயே மறுத்திருக்கிறேன். ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாய் அமையும் வசைச் சொல், மாற்றுத்திறனாளியை மதிப்பழிக்கும் வசைச்சொல்லை அப்படியே மூல மொழியிலிருந்து மொழிபெயர்ப்பதை கூடுமானவரை தவிர்த்திருக் கிறேன், அது சரியா, தவறா என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டே யிருந்தாலும்.


தொடுவானமல்லவே ஆங்கிலம்! _அமேஸான் - கிண்டில் மின் நூல்!

அமேஸான் - கிண்டில் மின் நூல்! 
தொடுவானமல்லவே ஆங்கிலம்!



ஒருதுறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆங்கிலம் தெரிந்ததாலேயே ஒருவர் சிறந்தவர் என்பதும் கிடையாது.

அதேசமயம், ஆங்கிலம் தெரியாத, புரியாத, பேசவராத காரணத் தால் வேறுதுறைகளில், குறிப்பாக கவிதை யெழுதுவதில், தரம் வாய்ந்தவர்களும் தாழ்வு மனப்பான்மையில் உழலும் தருணங்கள் நேருவதுண்டு.


பள்ளியிறுதி வரை தமிழ்வழிக் கல்வி கற்று கல்லூரியில் ஆங்கிலப்பாடம் எடுத்தபோது விரிவுரையாளர் கேட்கும் கேள்வி களுக்கு தொண்டைக்குழி வரை சரியான விடைகள் முட்டும். ஆனால், கோர்வையாக அவற்றை ஆங்கிலத்தில் சொல்ல வியலாத காரணத்தால் மௌனம் சாதிக்கவேண்டிய நிலை. 


ஆங்கிலத்தில் தடாலடியாகப் பேசும் மாணாக்கர்கள் வெகு ஜோராக எழுந்துநின்று சரளமான ஆங்கிலத்தில் தவறான பதில்களை வெற்றிச்சிரிப்போடு சொல்லுவார்கள்! 

இலக்கணப் பிழையில்லாமல் ஆங்கிலத்தில் விடையெழுதி அதிக மதிப்பெண்கள் பெறமுடியும் என்றாலும் அப்போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசத் துணிவே வராது.

அதனால்தான் இப்போதெல்லாம் கிரிக்கெட், சினிமா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு ஆங்கிலத்தில் ‘க்ராஷ்கோர்ஸ்’ என்பதாய் ஒருவழி முறையில் ஆங்கிலம் பேசக் கற்றுத்தரப்படுகிறது. அதாவது, இலக்கணம் கற்பிப்பதிலிருந்து ஆங்கிலம் கற்றுத் தருவது என்ற நிலைமாறி ஒருவர் எந்தத் துறையைச் சார்ந்தவரோ அந்தத் துறை சார்ந்து அவரிடம் என்ன கேள்விகள் பொதுவாகக் கேட்கப்படும், அவற்றிற்கு அவர் என்னவிதமாய் தர்மசங்கடப்படாமல் எளிய ஆங்கிலத்தில் பதிலளிக்கமுடியும், எப்படி தன் எண்ணத்தை வெளிப்படுத்த முடியும் என்பதே கற்றுத்தரப்படுகிறது. 


அப்படியொரு எளிய முயற்சியே இந்த நூல்.

லதா ராமகிருஷ்ணன்

தனிமொழியின் உரையாடல்

தனிமொழியின் உரையாடல்

தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பிட்ட எனது பனிரெண்டாவது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பு கிண்டில் மின் நூலாகவும் வெளிவந்துள்ளது.https://www.amazon.in/ebook/dp/B07RSCSLXY

‘குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு’ - எனது சமீபத்திய கவிதைத்தொகுப்பு - கிண்டில் மின் -நூல் வடிவில்

‘குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு’
https://www.amazon.com/AE81-ebook/dp/B083S1ZRB1/ref
நட்பினருக்கு வணக்கம். 

‘குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு’ என்ற தலைப்பில் எனது சமீபத்திய கவிதைத்தொகுப்பை நிதி நெருக்கடி நேர நெருக்கடி காரணத்தால் அச்சுநூலாக இப்போது கொண்டுவர இயலவில்லை. கிண்டில் மின் நூலாக வெளியிட்டுள்ளேன். https://www.amazon.com/AE81-ebook/dp/B083S1ZRB1/ref


தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....?

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் விதமாக படங்களையும் தகவல்களை யும் ஒரு சார்பாகவே தந்துகொண்டிருப்பதுதான்_

’இவர் செய்தால் சரி, அவர் செய்தால் தவறு’ என்ற ஒரே தவறான நேர்ப்பார்வையுடன் எந்தவொரு விஷயத்தையும் அணுகிப் பேசுவதுதான்_


குறைந்தபட்ச கண்ணியம் கூட இல்லாமல் கொச்சையாகப் பேசுவதும் பழிப்பதுதான்_

ஒரு எழுத்தாளருக்கு அழகு,
அதுவே அவருடைய மனிதாபிமானம், முற்போக்குத்தனம் 
என  என முடிவுகட்டிக் கொண்டவர்களாய் 
மற்றவர்களையும் மூளைச் சலவை செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டு 
தங்கள் முகநூல் டைம்-லைனில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும் 
சக படைப்பாளிகள் சிலரின் நியாயவாதி பாவமும் பாசாங்கும்தான் 
நம்மைப் பீடித்துள்ள 
மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தோன்றுகிறது.